Saturday, June 23, 2007

இளமை பொங்கும் மராத்தி சினிமா

மூன்று கால் நூற்றாண்டுகளுக்கு முன் கனவு தொழிலாளிகள் தாதாசாஹேப் தொர்னே மற்றும் தாதாசாஹேப் பால்கே கிய இருவரும் சந்த் துக்காராம் மற்றும் அயோதயாச்சா ராஜா கிய இரண்டு மராத்தி மொழி பேசும் திரைப்படங்களை உருவாக்கி மராத்தி திரையுலகின் திறப்பு விழாவை நடத்தி வைத்தனர்.
நாளும் கிழமையும் சுட்டிக் காட்ட அவை குறித்து வைக்கப் படவில்லைதான் னால் மராத்தி சினிமா 1932ம் ண்டு பிறந்தது என்பது உறுதியான தகவல். இன்று அது எழுபத்தைந்து ண்டுகள் கடந்தும் இளமை ததும்பி நிற்கிறது. வியப்பிற்குறிய விஷயம் என்னவென்றால் இதற்கு முன் ண்டிற்கு பதினைந்து படங்களை மட்டுமே தயாரித்து வந்த மராத்தி திரையுலகம் 75ம் ண்டில் வியக்கும் வகையில் ண்டிற்கு 75 படங்கள் என்ற கணக்கை தொட்டுள்ளது மகிழும் செய்திதான்.
மேலும் பிரபல மராத்தி நடிகை ஜெயஸ்ரீ காட்கர் மராத்தி திரையுலகில் வந்து ஐம்பது ண்டுகள் கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 1953ம் ண்டு ''திஸ்தே தசே நஸ்தே'' என்றத் திரைப்படத்தில் அறிமுகமாகி மராத்தி மற்றும் இந்திப் படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். ''சாங்கதே ஐய்க்கா'' என்ற சாதனைத் திரைப்படத்தில் நடித்து மராத்தி திரையுலகின் சிறந்த நடிக்கைக்கான சிம்மாசனத்தை பற்றினார். மாநில அளவிலும் அதனைத் தாண்டியும் பல அமைப்புகள் அவரது திறமையை பாராட்டி பரிசுகளும் விருதுகளும் வழங்கி பெருமை படுத்தி உள்ளது. ''மராத்தி திரையுலகம் ஒரு பொக்கிஷம் போன்றது. அங்கிகரிக்கப் படவில்லை என்றாலும் பொக்கிஷம் தனது பெருமையும் மதிப்பும் குன்றாமல் இருப்பது போல் மராத்தி திரைப்படங்கள் இருக்கின்றன. மராத்தி திரையுலகில் எனது வாழ்வின் பெரும்பகுதியை கழித்தது எனக்கு பெருமை தரும் விஷயமாக இருக்கிறது'' என்கிறார் நடிகை ஜெயஸ்ரீ.

இப்படி பழைய விஷயங்களை கொண்டாடியும் பலம்பெரும் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை பாராட்டியும் பொழுது கழிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்து வரும் ண்டுகளில் மராத்தி திரையுலகை ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி உருட்டிக் கொண்டு செல்ல பலம் பொருந்திய தோள்களைக் கொண்ட இளைஞர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். பாலிவுடின் மசாலாத் திரைப்படங்களுடன் போட்டியிட முடியாமல் திணரிக் கொண்டிருக்கும் மராத்தி திரைப்படங்களை உலக தரத்துக்கு கொண்டு போகும் கடும் முயற்சிகள் நடப்பதை கண்கூடாக காண முடிகிறது. எந்த வகையிலும் சமாதானம் செய்து கொள்ளாமல் தாங்கள் தேர்வு செய்த கதைகளை திரையில் காட்சி மொழியாக்கித் தருவதில் உறுதியாக உள்ளனர் மராத்தி திரைப் படைப்பாளிகள்.
வணிகச் சூழலில் சிக்கி கலை சிதைந்து போவதை விரும்பாத மாராத்தி படைப்பாளிகள் மண்ணின் மணத்துடன் கூடிய கதைகளையும் மக்களின் எதார்த்த வாழ்க்கையையும் படம் பிடிப்பதில் பிடிவாதமாக உள்ளனர். மராத்தி திரைப்படங்களில் படைக்கப் படும் கதாபாத்திரங்கள் நம்மையும் நம்மைச் சுற்றிய மக்களையும் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
மராத்தி திரைப்படங்கள் மிக சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளது. துவக்க காலத்தில் பக்திப் படங்களையும் இசை/பாடல்களை மையமாகக் கொண்டப் படங்களையும் பின் தமாசா என்னும் மேடை நடனக் கலையை மையமாகக் கொண்ட கிராமியக் கதைகளையும், பின் இயக்குனர் நடிகர் தாதா கோண்ட்கேவின் இரட்டை அர்த்த நகைச்சுவைப் படங்களையும் பின் இயக்குனர்கள் சச்சின் மற்றும் மகேஷ் கொதாரேவ கியோரின் இயக்கத்தில் வந்த எதார்த்த வகை நகைச்சுவைகளைக் கொண்ட படங்களையும் பின் இளமை பொங்கும் மாறுபட்ட படங்களான ''பிந்தாஸ்த்'' மற்றும் ''சாவர்கேத்-எக் கவுன்'' ''மாத்திசியா சுலி'' ''கோரிஜி'' மற்றும் ''சாவலீ'' கினவும் மற்றும் சமீபமாக நகரத்தின் நடுத்தர வர்க்க பிரச்சனையை மையமாகக் கொண்டு டிஜிட்டல் படமாக வந்த '' டோம்பிலி பாஸ்ட்' படம் வரை மராத்தி திரையுலகம் மிக மாறுபட்ட ஒரு பாதையில் பயணித்து வந்துள்ளது.
மராத்தி திரையுலகம் பல அறிவும் திறமையும் கொண்ட இயக்குனர்களை வரமாக பெற்றுள்ளது. இயக்குனர் பிரபாத்தின் காலத்தில் துவங்கி வி. சாந்தாராம், பால்ஜி பென்டார்கர், ராஜா கோஸ்வாமி, ராஜா பராஞ்பே, ஜாப்பர் பட்டேல், அமோல் பாலேகர், ஜாயோ, நசிகெட் பட்வர்தன், ஸ்மிதா தல்வல்கர், மகேஷ் மாஞ்ரேகர் என ஒரு பட்டாளத்தையே சொல்லாம். சமீபமாக நிஷிகாந்த் காமத், கஜேந்திரா அஹிரே, பிபின் நந்தகர்னி, சந்திப் சாவந்த், சந்திரகாந்த் குல்கர்னி மற்றும் ராஜேந்திர தலக் கியோர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பல புதிய முயற்சிகளுக்கு வித்தாய் மராத்தி திரையுலகம் இருந்துள்ளது. மராத்தி திரையுலகம் மிகத் தரமான படங்களை தனது பிடியில் வைத்துள்ளது. பாலிவுட் மற்றும் தென்னாட்டு திரையுலகோடு ஒப்பிடுகையில் மராத்தி திரையுலகம் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியதுதான் னால் படைப்பாக்கத்தில் பின் தங்கவில்லை.
மக்களின் ரசனையோடும் காலத்தோடும் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டாலும் புதுமையும், சோதனை யுத்திகளையும் பயன்படுத்தி வெற்றி காணாமல் இல்லை. இன்னும் பிடிவாதமாய் தரமான படங்களை தந்துகொண்டிருக்கும் சூழல் அதன் எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் கண்முன் காட்டுகிறது.
மற்ற மாநிலத் திரைப்படங்களுக்கு இருப்பதை விடவும் மராத்தி திரைப்படங்களுக்கும் போட்டியாக கோடிகள் புலங்கும் பாலிவுட் படங்கள் உள்ளன. ''டோம்பிவிலி பாஸ்ட்'' படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத் மற்றும் இயக்குனர் கஜேந்திர அஹிரே பாலிவுட் படங்களை எங்களால் என்றுமே மிஞ்ச முடியாது என்று ஒத்துக் கொண்டுள்ளனர். னால் காலத்தால் அழியாத பல சுவடுகளை எங்களால் தான் பதிவு செய்ய முடியும் என்று முகத்தில் உறுதியொளி காட்டுகின்றனர். தென்மாநிலங்களில் இன்னும் கலைப்படங்களுக்கென்று பசியோடும் தாகத்தோடும் காத்திருக்கும் வட்டம் இருப்பது போல் மராத்தி மொழியின் மிக யதார்த்த படங்களுக்கும் இருக்கிறது என்பதை உறுதிபட தெரிவிக்கின்றனர்.
''ஸ்வாஸ்'' திரைப்படம் மராத்தி திரையுலகை மீண்டும் தூக்கி நிறுத்தியது. மிகக் குறைந்த பொருளாதாரத்தில் உருவாக்கப் பட்ட ''டோம்பிவிலி பாஸ்ட்'' திரைப்படம் தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேசிய அளவில் படவிழாக்களில் கலந்து கொண்டு மராத்தி திரைப்படங்களின் திறமையை நிறுபித்து உள்ளன.
மேலும் பிபின் நந்தகார்னியின் ''உத்திராயன்'' அஹிரேவின் ''சாரிவர் சாரி'' மற்றும் ராஜேந்திர தலாக்கின் ''சாவலி'' கியத் திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டு உற்சாகப் படுத்தியப் படங்கள்.
மேலும் தொன்னூறுகளில் வந்த நகைச்சுவைப் படங்களான ''அகபாய் அரேச்சியா'' மற்றும் ''ஜத்ரா'' கியப் படங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகள். னால் விரைவிலேயே இந்த அலை ஓய்ந்து வர்த்தக ரீதியான படங்கள் உருவாகத் தொடங்கி நல்ல படங்கள் கரையொதுங்கிய நுரையாகிப் போனது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த அனைத்து திரைப்பட விழாக்களிலும் மாரத்தி திரைப்படங்களின் எண்ணிக்கை மகிழ்ச்சிக்குறியதாக இருந்தது. எண்ணிக்கையில் மட்டுமல்ல பட உருவாக்கமும் கதைசொல்லலும் வியக்கத்தகுந்ததாக இருந்தது.
தொழில்நுட்ப போர்வைகளை போர்த்திக் கொண்டு அலையும் மசாலத் திரைப்படங்களுக்கு மத்தியில் படம் பார்த்து எழுந்த பின்னும் என்னவோ செய்கின்ற படியான படங்கள் மராத்தியில் தயாரிக்கப் பட்டு வருவது சந்தோஷமளிக்கிறது.
குறிப்பாக சியத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்கள் பிரிவில் அதிகம் இடம் பெற்றது மராத்தி திரைப்படங்கள் தான் என்பதை கண்டிப்பாய் நம்பித்தான் க வேண்டும். கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களும் இன்னும் தங்கள் படைப்பாற்றல் இழக்காமல் இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் இத்தகு விழாக்களில் இடம் பெறுவது மிகக் குறைவே.
மராத்தி திரையுலகம் 75 ண்டுகள் கடந்து வந்த போதிலும் இளமை மாறாமல் தனித்தன்மை இழக்காமல் இருப்பது பெருக்கைகுறியதுதான்.



மதியழகன் சுப்பையா

Saturday, June 9, 2007

அரைவேக்காட்டு வணப் படங்களும் கொறிக்க சில குறும்படங்களும்

மதியழகன் சுப்பையா
அன்பாதவன்


உலகமும் உலகிலுள்ள உயிரணங்களும் தோன்றியதற்கான வரலாறு மத நூல்கள் ஒவ்வொறும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கதை புணைந்து கொண்டன. னால் மனித குலத்தின் நாகரீகம் பலவகையான வணங்களால் அறியப்படுகிறது. காலத்தின் சுவடுகள் உலகெங்கும் பதிந்து கிடக்கிறது.
நாகரீக மனிதன் தற்கால மனிதனின் வாழ்நிலை அரசியல் சுற்றுச் சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை நவீன கருவிகளின் உதவியோடு பதிவு செய்து வருகிறான். வணங்கள் புத்தகமாக்கப் படுவது. குறைந்து போயிற்று. எதார்த்த காட்சிகளை ஓவியமாக்குவது குறைந்து போனது அதிநவீன புகைப் படங்கள் எடுக்கத் துவங்கியதும் எல்லாம் மாறி விட்டது.
மேலும் சலனப் படங்களும், ஒளிப்பதிவு நுட்பமும் வணங்களை இன்று புதிய தளத்திற்கு கொண்டு போய் விட்டது. படப்பிடிப்பில் புதிய பாணியும். வணத் தொகுப்பில் புதிய யுத்தியும் பயன் படுத்தப் பட்டு விட்டன. பார்வையாளர்களை கவரும் வண்ணமும் வர்த்தக சினிமாவுக்கு இணையான படப்பிடிப்பும் ஒளி அமைப்பும் செய்யப் பட்டு வனங்கள் இன்று வளர்ந்து ளாகி நிற்கின்றன.
இந்திய நாடு சுதந்திரம் பெரும் போது அக்காட்சிகளை படம்பிடிக்க இந்திய அரசிடம் படக்கருவிகள் இல்லாத காரணத்தால் இன்று அக்காட்சிகளை பிரிட்டிஷ் தொலைக் காட்சியினரிடமிருந்து வாங்கும் நிலைக்கும் வந்துள்ளோம். மேலும் வணப் படங்களை பாதுகாக்க வேண்டி இந்திய அரசிடம் சமீப காலம் வரை முறையான பிரிவு எதுவும் இல்லை என்பது வருந்தத் தக்கது.
மத்திய அரசு சார்பில் இயங்கி வரும் பிலிம் டிவிஷன் ப் இந்தியா என்ற அரசு நிறுவனம் இன்று வணம் மற்றும் குறும்படங்களின் காப்பகமாக விளங்கி வருகிறது. இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மேற்பார்வையில் பிலிம் டிவிஷன் இயங்கி வருகிறது. பிலிம் டிவிஷன் ஜனவரி திங்கள் 1948ம் ண்டும் துவங்கப் பட்டது. இந்திய செய்தித் துறை 1943ம் ண்டு யுத்த நிகழ்வுகளை பதிவு செய்து தெரிவிக்க வேண்டி துவக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் வணப் படங்களை திரையிட ஒளிப்பதிவு சட்டம் 1918ம் ண்டு ஏற்படுத்தப் பட்டது.
பின் 1949ம் ண்டு முதல் பிலிம் டிவிஷன் வணப் படங்கள், செய்திப் படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நாட்டின் மூளை முடுக்கெல்லாம் திரையிடத் துவங்கியது. இப்படங்கள் சுமார் பதினைந்து பல்வேறு மொழிகளில் திரையிடப் பட்டுள்ளன.
சுதந்திரத்திற்கு பின் இந்திய நாட்டின் வளர்ச்சி நிலை, முக்கிய நிகழ்வுகள் மற்றும் இன்பங்கள், துன்பங்கள் என அத்தனை நிகழ்வுகளையும் படம் பிடித்து பாதுகாத்து வருகிறது. பிலிம் டிவிஷனின் தலைமை அலுவலகம் இந்தியாவின் செலுலாய்ட் நகரமான மும்பையில் அமைந்துள்ளது. மும்பையிலுள்ள பிலிம் டிவிஷனில் ரிகார்டிங் தியேட்டர்கள், எடிட்டிங் அறைகள், அனிமேஷன் பிரிவு, கேமராக்கள், வீடியோ செட்டப்புகள் மற்றும் பிரிவீவ் தியேட்டர்கள் என படத்தயாரிப்பிற்கான அனைத்து வசதிகளும் ஒருங்கே உள்ளன. மேலும் இந்தியாவின் மிக முக்கிய பதினைந்து மொழிகளில் மொழிப்பதிவும் செய்யப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
படப் பிரின்ட்களை நாடு முழுவதும் விணியோகிக்க மும்பை, சென்னை, திருவணந்தபுரம், மதுரை, ஹைதரபாத், விஜயவாடா, பெங்களூர், நாக்பூர், லக்னவ் மற்றும் கொல்கத்தா கிய பத்து முக்கிய நகரங்களில் கிளைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்திய நாட்டைப் பற்றி கலை, கல்வி, தொழில், விழாக்கள் என பல்வேறு தலைப்புகளில் சுமார் எட்டாயிரத்திற்கும் மேலான படங்கள் உள்ளன. இவற்றின் மூலம் இந்திய நாட்டின் அசைவுகள் அத்தனையும் கண்டு அறியலாம். மேலும் பிலிம் டிவிஷனின் படங்களை www.filmsdivision.org என்ற இணைய தளத்தில் தரவிரக்கிப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் VCD தகடுகளை வாங்கவும் செய்யலாம்.
தற்போது படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றி அவற்றை காக்க அரசு வணச் செய்துள்ளது. இதனால் சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டப் படங்கள் பாதுகாக்கப் படுவதுடன் மிகப் பெரிய சொத்தாகவும் விளங்கும்.
அனிமேஷன் என்ற கேலிச்சித்திரப் படப் பிரிவில் பாரம்பரிய படம்செய்முறையை மாற்றி நவீன கணினி நுட்பங்கள் கொண்ட பிரிவு அமைக்கப் பட்டுள்ளது. 2-D மற்றும் 3-D வகைப் படங்களை இயக்க ஓபச், கான்செர்டோ, ஹை-என்ட் மற்றும் மாயா போன்ற கணினி மென்பொருட்களால் ன கூடமும் அமைக்கப் பட்டுள்ளது.
வணப் படங்கள் மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தக் கருத்துகளை கொண்ட பிரபலமான கதைகளையும் படமாக்கி வருகிறது. மக்களுக்கு சொல்ல வேண்டிய அரசு செய்திகளையும் பட வடிவில் கொடுக்க பிலிம் டிவிஷன் உதவி புரிகிறது.
பிலிம் டிவிஷன் மும்மை சர்வதேசிய வணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான விழாவை (MIFF) 1990ம் ண்டு முதல் நடத்தி வருகிறது.
இரண்டு ண்டிற்கு ஒருமுறை நடக்கும் இவ்விழா உலகப் புகழ் பெற்றது. தேசிய மற்றும் சர்வதேசியப் பிரிவில் போட்டிப் பிரிவில் உள்ள படங்களில் சிறந்தப் படங்களுக்கு ரொக்கப் பரிசுடன் விருதுகளும் வழங்கப் படுவகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள பட இயக்குனர்கள் எதிர்பார்க்கும் ஒரு விழாவாகி விட்டது. மும்பையில் மட்டுமல்லாது முக்கிய நகரங்களிலும் இவ்வாறான பட விழாக்களை பிலிம் டிவிஷன் நடத்தி வருகிறது.
இவ்வாண்டும் கோலகலமாக விழா நடந்தது. சுமார் முப்பத்தைந்து நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப் பட்டிருந்தது. அதில் சிறப்பு பிரிவுகளாக படங்கள் திரையிடப் பட்டது. ஜெர்மனியிலிருந்து 'ஹைபிரிட் பார்ம்ஸ்' (Hybrid forms) வகைப் படங்கள் திரையிடப் பட்டன.
உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லினின் சமகாலத்தவரும் அக்காலகட்டத்தின் மூன்று முக்கிய நகைச்சுவை நடிகர்களுள் ஒருவருமான பஸ்டர் கீட்டனின் (Buster Keaten) மூன்று மௌனப் படங்கள் திரையிடப் பட்டன.
சார்க் பேக்கேஜ் (SAARC Package) பிரிவில் நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் கிய நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப் பட்டன.
வட கிழக்கு மாநிலங்களை உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்வியோடு 'வட கிழக்கு மாநிலப் படங்கள்' என்றப் பிரிவில் அசாம், மெஹலாயா, அருணாச்சல் பிரதேஷ், மணிப்பூர், மிஜோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா கிய மாவட்டங்களிலிருந்து படங்கள் வந்திருந்தது.
மும்பை பட விழாவில் ஸ்திரேலியப் படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இவ்வாண்டும் AFC என்ற பிரிவில் ஸ்திரேலியாவின் வணப் படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப் பட்டன.
இன்று உலகின் அதிகபடியான ரசிகர்களை கொண்ட இராணியப் படங்களுக்கென்று 'இராணியன் இண்டிப்பெண்டட்' என்றப் பிரிவில் சிறந்த படங்களை காண முடிந்தது.
மாணவர்கள் பிரிவில் சென்னை திரைப்பட இயக்கம், புனே திரைப்பட இயக்கம் கொல்கத்தாவின் சத்யஜித் ரே திரைப்பட இயக்கம், டெல்லியின் ஜமியா மிலியா திரைப்பட இயக்கம், அஹமதாபாத்தின் நேஷனல் இன்ஸ்ட்டிடியுட் ப் டிசைன், BPFTIO, கத்தக் மற்றும் ஹம்பர்க் மீடியா ஸ்கூல், ஜெர்மனி என பல திரைப்பட கல்லூரிகளில் இருந்து மாணவர்களின் திறமைகள் வெளிப்பட்ட சிறந்த படங்கள் தொகுத்து திரையிடப் பட்டது.
மிகவும் குறிப்பிடத் தக்க பிரிவு என்றால் ' பிரி இன்டிபென்டன்ட் பில்ம்ச்' பிரிவில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு மும் இயக்கப் பட்ட வணப் படங்களை தூசு தட்டி காண்பித்தது. இதுவரை இல்லாத சிறப்பு எனலாம்.

தூர்தர்ஷன் கிளாசிக்ஸ் பிரிவில் நாம் பார்க்கத் தவறிய பல சிறந்த குறும்படங்கள் மற்றும் வணப் படங்களை திரையிட்டது பெரும் மகிழ்ச்சி.

உலகெங்கிலும் இருந்து நடனம் மற்றும் நடனம் சார்ந்த படங்களை 'டான்ஸ் வித் கேமரா' என்றப் பிரிவில் திரையிட்டார்கள்.

மேலும் உலகின் உயரிய திரைப்பட விருதான ஸ்கார் விருது பெற்றப் படங்களும் ஸ்காருக்கு பரிந்துரைக்கப் பட்டப் படங்களும் திரையிடப் பட்டது. இந்தப் பிரிவு படங்களைக் காண திரைப்பட ர்வலர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் நீண்ட படங்கள், குறும்படங்கள், வணப் படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் இடம் பெற்றது.
சிறப்பு திரையிடலாக பிரான்ஸ் நாட்டின் இயக்குனர் ரேய்மண்ட் டிபார்டனின் படங்கள் திரையிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி விழா முழுக்க விதவிதப் படங்களால் நிரம்பி இருந்தது. னால் அரங்கம் நிரம்பியது ஏனோ வெளிநாட்டு வணப் படங்களுக்குத்தான். காரணங்கள் பல எனலாம். இந்திய நாட்டின் வணப் படங்களுக்கு இயக்குனர்கள் எடுத்துக் கொள்ளும் பிரச்சனை அல்லது சம்பவம் என்பது நீர்த்துப் போன ஒன்றாக உள்ளது. சிலர் நல்ல கருக்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றைப் படமாக்கத் தெரியாத நிலை. இன்று இந்தியாவின் முன்னனி தனியார் செய்தி தொலைக் காட்சிகள் செய்யும் செய்தி தொகுப்பு வேலைச் செய்து விட்டு படம் பண்ணி விட்டதாக வெளியே வந்து விடுகிறார்கள். பிரச்சனைகள் குறித்த சரியான ய்வு இருப்பதில்லை. படம் முடிந்தபின் பலப்பல கேள்விகளோடு பார்வையாளர்கள் எழுந்து செல்லும் நிலை உருவாகிறது. ஒரே காட்சிகளை அல்லது ஒரே மாதிரியான காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டுவது சலிப்படையச் செய்கிறது. இந்தியாவில் சமீபகாலமாய் எத்தனையொ நிகழ்ந்து விட்டது. னால் காலப் பதிவுகளாய் எதுவும் இல்லை.

சபானா ஜ்மி என்ற கலையரசி

அன்பாதவன்
மதியழகன் சுப்பையா


வெற்றிக் களிப்பில் மதிரா (போதை வஸ்து) குடித்து போதையில் நிதானமாகவும், டை அலங்கோலமாகதபடி கவனமாகவும் ட்டம் போடுவதாகட்டும் பாத்திரம் சிறப்பாக அமைய தலைக்கு மொட்டைப் போட்டுக் கொள்வதாகட்டும், விபச்சாரியாக, லெஸ்பியனாக, அழகு நாயகியாக, வஞ்சிக்கப் பட்ட பெண்ணாக, கற்பிழக்கும் கீழ்குடி பெண்ணாக ஏன் பேயாகக் கூட நடித்து விட்ட ஒரு நடிகையைத் தெரியமல் இருப்பவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு சினிமா பார்க்காதவர்களாகத்தான் இருக்க முடியும். சபானா ஜ்மி தான் இவ்வாறு பல நடிப்பு பரிணாமங்கள் காட்டிய நடிகை.
1970களில் இந்திய சினிமாத் துறையில் புதிய ரத்தம் பாய்ந்த காலம் எனலாம். இந்தியாவில் சினிமா உருவாகும் அனைத்து மாநிலங்களிலும் புதிய பாணியில் படம் இயக்கும் எதார்த்த இயக்குனர்கள் உருவானார்கள். இந்த சூழலில்தான் 'புதிய அலை' சினிமா (New Wave cinema) உருவாகியது. இந்த மாதிரியான ஒரு சூழலில் சினிமா உலகில் மாற்றமான போக்கில் நல்ல இயக்குனர்கள் சிறந்த நடிகர்கள் மற்றும் காலத்தால் அழியாத திரைப்படங்கள் நமக்க கிடைக்க வாய்ப்பாக இருந்தது.
1974ல் 'பாஸ்லா' என்றப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை சபானா ஜ்மி. முதல் படம் அந்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டார். இயக்குனர் ஷ்யாம் பெனகலின் ' அங்குர்' படத்தில் தனது பண்பட்ட நடிப்பால் இந்திய நாட்டையே நிமிர்ந்து உட்கார வைத்தார். வாளிப்பான உடலமைப்பு, முன்னே பின்னே சதைப்பற்று என நடிகையை அளக்கும் பாரம்பரிய அளவுகோளில் எங்கும் பொறுந்தாதவர் சபானா.

'அங்குர்' படத்தில் தாழ்த்தப் பட்ட பெண்ணாக நடித்துள்ளார். கணவன் விட்டுப் போன பின் பண்ணையின் முதலாளியின் இளம்மகன் பட்டினத்திலிருந்து வந்து தங்கியிருக்கிறான். அவனுக்கு பணிவிடைகள் செய்யும் அவன் அவனுடன் படுக்கவும் செய்கிறாள். சை தீர அவளை அனுபவிக்கும் அவன் இளம் பெண் ஒருத்தியை திருமணம் செய்து திரும்புகிறான். அடித்து ஒதுக்கப் படுகிறாள். இப்படியான சூழலில் தன்னால் எதிர்க்கவும் முடியும் என்பதை கிணற்றில் தண்ணீர் பாம்பு ஒன்றின் சீற்றதை அலட்சியம் செய்து அதனை தனது கையால் தட்டி விடும் காட்சியில் அவளுக்குள் இருக்கும் எதிர்ப்பு முதல் முறையாக வெளிப்படுகிறது. படம் முழுக்க அதிகம் வசனம் பேசாமல் னால் தனது உடல் மொழியால் அனைத்தையும் உணர்த்தி நடித்திருக்கும் சபானா இந்தியர்களின் கவனத்தை உடனடியாக பெற்றார்.
நடிகை ஸ்மிதா பாட்டில் காலமாகிப் போன காரணத்தாலோ என்னவோ அவர் நடிக்க இருந்த பல பாத்திரங்களில் இவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. னால் சபானாவை விட்டால் வேறு யாரும் அவர் செய்த குறிப்பிடும்படியான பல பாத்திரங்களை அவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது.
தீபா மேத்தாவின் 'பயர்' படத்தில் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடும் பாத்திரத்தில் நடிக்க வந்த அத்தனை எதிர்ப்புகளையும் மீறி முழு ஈடுபாட்டுடன் அந்த பாத்திரமாவே தனது சக நடிகை நந்திதாதாஸ்சுடன் நடித்திருந்தார்.
சபானாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ' காட் மதர்' திரைப்படம் குறிப்பிடத் தக்கது. ண்கள் க்ரமிப்பில் இருக்கும் ரசியல் உலகில் தனியொரு பெண்ணாக அரசியலில் ஈடுபட்டு சாணக்கியத் தந்திரம் புரியாமல் அத்தனை சூழ்ச்சிகளையும் பீய்த்து எரிந்து விட்டு கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுத் திரும்பும் சபானா மதிரா எனப்படும் போதை பாணத்தை குடித்துவிட்டு வெற்றிக் கழிப்பில் ட்டம் போடும் அந்த நடிப்பு யாரும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பயிற்சியால் வந்தது என்று யாரும் கூறிவிட முடியாது.
நல்ல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்கள் வயிரை காரணம் காட்டி கொஞ்சம் குப்பைகளும் கொட்டி விடுகின்றனர். சபானாவும் குப்பை கொட்டி உள்ளார். கமர்சியல் குப்பை. மரத்தைச் சுற்றி நடனம் டி உள்ளார். இடுப்பு ட்டி விரசமாடியுள்ளார். னால் நல்ல படங்கள் செய்யத் தவரியதில்லை.
' மக்டி' என்றப் சிறுவர்களுக்கான திரைப்படத்தில் மாமிசம் திண்ணும் பேயாக நடித்து குழந்தைகள் மனங்களில் நீங்க இடம் பிடித்து உள்ளார். னால் திரைத் துறையில் நடிகைகள் எத்தனைதான் சிறப்பாக செய்தாலும் அவர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய அங்கிகாரம் முழுமையாக கிடைப்பதில்லை. இயக்குனருக்கே அல்லது அப்படத்தில் உள்ள நடிகருக்கோ என போய்விடும் ண்களின் திக்கத்தில் பெண்களின் திறமைகள் மழுங்கடிக்கப் பட்டு விடப் படுகிறது.
இயக்குனர் ஸ்யாம் பெனகலின் 'மண்டி' திரைப் படத்தில் விபச்சாரி பாத்திரத்தில் சபானா நடித்து உள்ளார். விபச்சாரம் செய்கின்றவளுக்குறிய நடை பேச்சு முறை என அனைத்தையும் அத்தனை சிறப்பாய் செய்திருந்தார் ண்களிடம் காட்டும் செயற்கை புன்னகையும் காமப் பார்வைவும் நலினமற்ற நடையும் தனது காரியத்தை சாதிக்க எது வேண்டுமானலும் செய்யும் துணிவும் என தேர்ந்த விலைமாதுவாக அவர் நடித்ததுள்ளது பாரட்டத்தக்கது. னால் படத்தின் இயக்குனர் பற்றியும் சிறிய பாத்திரத்தில் நடித்த நடிகர் நஷிர்தின்ஷா பற்றியும் பேசப் பட்ட அளவுக்கு சபானா பேசப் பட வில்லை.
நடிப்பு மட்டுமல்லாது தன்னை முழுமையாக அற்பணித்த சமூக சேவகியாகவும் மக்களிடம் சபானா அறிமுகமாகி உள்ளார். அடித்தட்டு மக்களின் உரிமை பிரச்சனை பெண்களுக்கான பிரச்சனை என்றால் அழைக்காமல் ஜராகி விடுவது சபானாவின் வழக்கம். தனது இமேஜ் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது மும்பையின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டு அவர்களுக்கான உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார்.

பிரபல இயக்குனர்கள் பலரும் நடிப்பிற்காக நம்பி இருக்கும் நல்ல நடிகைகளுள் சபானாவும் ஒருவர்.

மக்கள் நாயகன் தாதா கோண்ட்கே

அன்பாதவன் / மதியழகன் சுப்பையா


மராத்தி திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் தாதா கோண்ட்கே. அவரது இடத்தை நிரப்ப இன்று யாரும் இல்லை. தாதா கோண்ட்கேவின் காரணத்தால் மராத்தி திரைப்படம் உலக அளவில் பேசப் பட்டது. மராத்தி திரைப்பட உலகில் தொடர்ந்து ஒன்பது வெள்ளி விழாப் படங்களை கொடுத்த கோண்ட்கே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் சாதனையாளராக இடம் பிடித்து உள்ளார்.
கோகுலாஸ்டமி தினத்தில் பிறந்த இவருக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டப் பட்டது. நல்ல இசை ஞானத்துடன் வாட்டசாட்டமான வாலிபனாக வளர்ந்தார். இவர் தனது பகுதியில் உள்ள பேண்ட் வாத்தியக் குழுவில் சேர்ந்தார். இதனால் இவர் பேண்ட்வாலா தாதா என்று துவக்கத்தில் அழைக்கப் பட்டார். மக்கள் ராஷ்டிரிய சேவா தள் என்ற மக்கள் நல அமைப்பு ஒன்றில் சேர்ந்த தாதா நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். இயக்குனர் வசந்த் சப்னியின் ' இச்சா மாஜி பூரி கரா'' என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மேடை ஏற்றப் பட்டது. மராத்தி திரைப்படமான 'தம்பிடி மாத்தி' என்ற படத்தில் இயக்குனர் பால்ஜி பெண்டார்க்கர் தாதாவை திரை உலகுக்கு அறிமுகப் படுத்தினார்.
தனது மண்மனம் மாறத நகைச்சுவை உணர்வாலும், இரட்டை அர்த்த வசனங்களாலும் நாட்டுப்புற பாடல் மெட்டுக்களாலும் மராத்தி திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். மராத்தியில் பதினாறு படங்களையும் இந்தியில் நான்கு படங்களையும் வழங்கி உள்ளார். இவரது படங்களுக்கு இவரே இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.
நகைச்சுவை மன்னன் சார்லி சாப்லினை நினைவு படுத்தும் நடிப்புத் திறனால் மராத்தி ரசிகர்களின் மனங்களில் இன்னும் குடி கொண்டிருக்கிறார். இவரது அனைத்துப் படங்களிலும் நடிகை உஷா சவான் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு அம்சமாகும்.
இவ்வாறு தனது திரைப்படங்களில் இன்னும் சில விஷயங்களை மாற்றாமல் வைத்து இருந்தார். உதாரணமாக பாடகி உஷா மங்கேஷ்கர் இவரது அனைத்துப் படங்களிலும் பாடி உள்ளார்.
இரட்டை அர்த்த வசனங்களை திரைப்படத்தில் காட்டுவது குறித்து அவரிடம் கேட்கையில் ' எனது படங்கள் மக்களுக்கானது. அவர்கள் இவ்வாறான வசனங்களை ரசிப்பதால் நான் வைக்கிறேன். எனது படங்கள் அவர்களை திருப்தி படுத்தினால் போதும். மற்றவைகள் குறித்து நான் கவலைப் பட மாட்டேன். எனது படங்கள் மில் தொழிலாளிகளுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் தயாரிக்கப் படுவது. கடுமையான வேலைக்குப் பின் அவர்களுக்கு மனச்சோர்வு போக்கும் கலைகள் தேவைப் படுகிறது. அதை என் படங்கள் செய்வதாக அவற்றின் வெற்றியின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். அதனால் தரமான என்ற முத்திரை குத்தி முதலாளி வர்க்கங்களுக்கான படங்களை செய்வதில் எனக்கு விருப்பமில்லை' என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் 'பணக்கார வர்க்கத்தினர் ஒரு திரைப் படத்தை திரும்பவும் பார்க்க வர மாட்டார்கள். னால் ஏழைகளும் மில் தொழிலாளர்களும் விவசாயிகளும் மனமகிழ்வுக்கு எனது திரைப்படங்களை மூன்று முறை கூட பார்க்கிறார்கள்' என்றார். இதுவே கூட இவரது படங்கள் அபார வெற்றி பெற்றதற்கு காரணமாக இருக்கலாம்.
மராத்தியில் 'தமாஷா' என்று சொல்லப் படும் நாட்டிய நாடகங்கள் மிகவும் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் அந்தக் கலையை வடிவம் மாற்றி சினிமாவாக தாதா கோண்ட்கே வழங்கியதால் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்று நம்பப் படுகிறது.
இந்திப் படங்களையும் செய்யும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க '' அந்தேரி ராத் மேன் தியா தேரே ஹாத் மேன்'' என்ற படத்தை நடித்து இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
பாடகி உஷா மங்கேஷ்கரைப் போல் பாடகர் ஜெயவந்த் குல்கர்னி இவரது பெரும்பாலான படங்களுக்கு பாடியுள்ளார். இவர்களின் உறவு இந்தி திரைப்பட இயக்குனர் நடிகர் ராஜ்கபூர் மற்றும் பாடகர் முகேஷ் குமார் ஜோடியைப் போல் இருந்தாதக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தான் மராத்திய மாவீரன் சிவாஜியின் வேடத்தில் நடிக்க முடியாது என்றும் மற்ற எந்த சீரியசான பாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியாது எனவும் தான் தனது எல்லைகளை அறிந்ததாகவும் அவற்றிற்கு உட்பட்டே தனது பாத்திரங்களை அமைத்துக் கொள்வதாகவும் தாதா தெரிவித்து உள்ளார்.
தாதா தனது கடைசி காலம் வரை சீரியசான கதைகள் கொண்ட ஒரு படம் கூட இயக்கி நடிக்கவில்லை. முடிவடையாத அவரது கடைசிப் படம் சீரியசான படம் என்று நெருங்கிய வட்டங்கள் தெரிவித்து உள்ளன.
வி சாந்தாராம் இயக்கிய ' தோ ங்கேன் பாரா ஹாத்'' என்றப் படத்தைப் போல் சீரியசான படங்களை தனது இறுது காலக் கட்டங்களில் இயக்க இருப்பதாக தன் மனத் திட்டத்தை தெரிவித்து உள்ளார். னால் அவை நிறைவேறாமல் போய் விட்டது.
தும்ப் தும்ப் தும்ப் என்று ஒலிக்கும் இசையை எத்தனை முறை கேட்க முடியும். எல்லோருக்கும் டிஸ்கோவும் மேற்கத்திய காது கிழிக்கும் இசையும் தேவைப் படுவதாக இசையமைப்பாளர்கள் சொல்கிறார்கள் இவர்களால் திரையிசை மேதை நவுசாத் மற்றும் எஸ் ராமச்சந்திரனை போல் இசை வழங்க முடியாத காரணத்தால் இவர்கள் இவ்வாறு செய்கின்றனர். எனது இசையமைப்பாளர் கூட ஒருமுறை துணை இசைக் கலைஞர்கள் 150 பேரை வரவழைத்து விட்டு வெறுமனே 35 பேர்களை மட்டுமே பயன் படுத்தினார். இது எத்தனை முட்டாள்தனமான காரியம். தின் தாக் தின் தாக் என்று நமது பாரம்பரிய இசைக் கருவிகளை வைத்து ஒரு ரிக்கார்டு முழுக்க நிரப்பி ஒலித்தால் கூட மக்கள் ரசிப்பார்கள் என்று எண்பதுகளில் டிஸ்கோவும் மேற்கத்திய இசையும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தாதா தனது கருத்தை இவ்வாறு தெரிவித்து உள்ளார் என செய்தி.
இல்லஸ்டிரேட்டட் வீக்லி ப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்தப் பேட்டியில் கலைப் படங்கள் குறித்தும் தாதா தனது காட்டத்தை தெரிவித்து உள்ளார். திரைப்பட இயக்குனர் ஜாபர் பட்டேல் உட்பட பலர் சோதனைப் படங்களை எடுப்பதாக சொல்லி வருகிறார்கள் இவர்கள் ஏன் திரைப்படங்களில் சோதனை செய்ய வேண்டும் விவசாயத்தில் சோதனை செய்தாலாவது சோற்று வளம் பெருகும்' என்று தெரிவித்து உள்ளார். இந்த பேட்டிக்குப் பின் இயக்குனம் ஜாபர் பட்டேல் தாதாவுடன் பேசிக் கொள்வதில்லை என்பதையும் தாதா மற்றொரு சமயம் தெரிவித்து உள்ளார்.
சுமார் இருபது ண்டுகளுக்கு தாதா கோண்ட்கே மராத்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வந்தார். அவர் தொட்டதெல்லாம் மிடாஸ்சின் தொடுதலாகவே அமைந்தது.
தாதா பேசும் போது வார்த்தைகள் ஏகே 47 ரக துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வெளிப்படுவது போல் இருக்குமாம். இம்முறையில் வசனம் பேசும் அவர் தனது வேக மொழிக்கு நிறுத்தர் குறியீடுகளாகவும் அழகு பூத்தையல் போலவும் தனது உடல் மொழியை பயன்படுத்தி விடுவார் என்பது இவரது தனிச்சிறப்பு.
மும்பையின் மத்தியில் தார்தேவ் பகுதியில் தாதாவின் அலுவலகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வருவார்கள். அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கும் அவர்களை சந்திப்பதற்கும் எப்பொழுதும் தாதா முகம் சுழித்ததே இல்லை. ரசிகர்கள் அவரது திரைப்படங்களில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை தெரிவித்து மகிழ்வார்கள். தங்கள் இல்லத்து மணவிழா மற்றும் பல்வகை விழாக்களுக்கும் அழைப்பு விடுப்பார்கள். இவற்றில் தாதா தவறாமல் கலந்து கொண்டுள்ளார்.
ஒரு நடிகராக இருந்து கொண்டு இவ்வாறு செய்ய வேண்டாம் என்று தாதாவின் நெருங்கிய வட்டங்கள் கேட்டுக் கொண்ட போதும். படப்பிடிப்பின் போது யாரும் பான்(வெற்றிலைப்பாக்கு) கொடுத்தால் வாங்கா வேண்டாம் விஷம் வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அவர் கண்டு கொள்ள மாட்டார். நான் சராசரி மனிதன் என் தொழில் நடிப்பாகிப் போனது. அதனால் நான் வாழ்க்கையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராம் ராம் தாதா என்று என்னை அன்புடன் அழைக்கும் எவரையும் நான் ஓடிப் போய் கட்டிக் கொள்வேன் என்று பதிலளித்து எதிராளர் வாயை அடைத்து விடுவார்.
மும்பையின் லால்பாக் குடிசைப் பகுதியில் பிறந்த இவர் அப்பகுதியில் எந்த வம்புதும்பு நடந்தாலும் 'தடாம்' என்று குதித்து பிரச்சனைகளை தீர்ப்பாராம். பெண்களை கிண்டல் செய்தல் போன்ற பிரச்சனையில் சோடா பாட்டில்கள், கற்கள், செங்கல் என வீசி சண்டையிட்டுள்ளார்.
அப்னா பாஜாரில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்திற்கு காய்கறி கூடை சுமந்து தனது காலத்தை போக்கிய இவர் வாய்ப்பு கிடைக்கையில் நண்பர்களின் பேண்ட் வாத்தியக் குழுவிலும் பணியாற்றிக் கொள்வார். பேண்டில் அனைத்து கருவிகளையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். தனக்கு தரவாக இருந்த மூத்த சகோதரரின் திடீர் மரணம் தாதாவை கடும் மனக்கஷ்டத்திற்கு உட்படுத்தியது. சுமார் ஒரு வருட காலத்திற்கு யாரிடமும் பேசவில்லை. ஒழுங்காய் சாப்பிடவில்லை. பைய்த்தியம் பிடித்தது போல் கிப் போனார். இப்படியே வாழ்ந்து என்ன பயன் என்று அவரே முடிவு எடுத்து தனது கவலைகளை மறக்க நகைச்சுவை அரிதாரம் பூசிக் கொண்டார்.
இவர் நடித்த முதல் நாடகமான 'இச்சா மாஜி பூரி கரா' மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடந்துள்ளது. இந்தி திரைப்பட பாடகி ஷா போஷ்லே இவரது நாடகங்களை தவறாது பார்த்து வந்தார். பின் மாராத்தி இயக்குனர் பாலாஜி பெண்டார்க்கர் மூலம் தாதாவின் திரையுலக பிரவேசம் நிகழ்ந்தது.
மராத்தி திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு இந்திப் பட உலகில் தனது திறமையை காட்ட வந்தார். தயாரிப்பாளர்களிடம் கதை சொன்ன போது காமெடி என்பது படத்தின் ஊடக இருந்தால் போதும் என்று சொல்லி மறுத்துள்ளனர். முதல் ரீலில் எட்டு கொலைகளை காட்டுதல் எந்த வகையில் நல்லப் படமாக இருக்க முடியும். அல்லது மக்களை அழவைக்கும் கதைகள் என்ன பயனைத் தரும் என தான் நடித்து இயக்கி மாராத்தியில் வெற்றி பெற்ற ' ராம் ராம் கங்காராம்' படத்தையே இந்தியில் ரீமேக் செய்தார். படத்தை தானே தயாரிக்கவும் செய்தார்.
மேலும் இந்திப் பட உலகில் எல்லோர் மீதும் கடுமையான தனது அதிருப்தியை தெரிவித்தார், இங்கு போலித்தனம் அதிகம் உள்ளதாகவும் சுலக்ஷனா பண்டித் போன்ற பட வாய்ப்பே இல்லாத நடிகைகளிடம் சென்றால் கூட 36 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிப்பார்கள். இந்த 36ம் எண் இந்திப் பட உலகின் வியாதி என்றும் கடுமையை தெரிவித்து உள்ளார்.
தாதா எண்பதுகளின் மையங்களில் ந்திரப் பிரதேசத்தில் என்டி ராமாராவ் நடிகராய் இருந்து அரசியலில் வெற்றிப் பெற்றதை போல் தானும் பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என சிவசேனா கட்சியில் சேர்ந்தார். தனக்கு சீட் தரும்படி சிவசேனா தலைவர் பால் தாக்ரேவிடம் கேட்க அவர் உனக்கு என்ன பதவி வேண்டும் என்று கேட்க தான் முதல்வராக வேண்டும் என்று தாதா தெரிவித்து உள்ளார். அதற்கு பால்தாக்ரே ' சிவாஜி பார்க்கின் குடிசைப் பகுதியிலிருந்து ஒருவன் முதல்வராக வரலாம் னால் அவனது குடும்பப் பெயர் கோண்ட்கேவாக இல்லாமல் ஜோஷியாக இருந்தால் மட்டுமே' என்று மறுத்து விடவே தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயருக்குப் பின்னால் எம் எல் ஏ என்ற எழுத்துகளை சேர்த்துக் கொள்ளும் கனவு பொய்யானது.
தனது வாழ்வில் வெற்றிக்கும் தோல்விக்கும் சம மதிப்பு கொடுத்தக் கலைஞன் தாதா கோண்ட்கே. தாதா பிறந்தும் அவரது ஜாதகத்தில் வாழ்க்கை முழுவதும் பெரும் தோல்விகளைக் காணப் போவதாக பண்டிதர் தெரிவித்து உள்ளார். னால் அது பொய் என்று நிறுபித்து விட்டேன் என்கிறார் தனது வெற்றிச் சிரிப்போடு.
டம்பரத்தை கொஞ்சமும் விரும்பாத தாதா பூனாவுக்கு செல்லுகையில் ஒற்றை மனிதனாக கப்பல் போன்ற காரில் செல்லாமல் மாநில பயணிகள் பேருந்தில் பயணம் செய்து உள்ளார்.
கால் முட்டுவரை தொளதொள என்றிருக்கும் கால்ச்சட்டையும் அதில் கீழே வரை தொங்க விடப்பட்ட நாடாவுமே அவரது திரைப் படங்களின் உடையாக இருந்து வந்திருக்கிறது. தன்மை ஒரு பாமரனாகவே அவர் எப்போதும் சித்தரித்து காட்டியுள்ளார். அப்படியே வாழ்ந்தும் உள்ளார்.
தாதா தனது கடைசி காலம் வரை திருமணம் கதவர் போல் காட்டிக் கொண்டாலும் சட்டபூர்வமாக மனைவியும் ஒரு மகளும் அவருக்கு உண்டு. னால் அவர் தனது இறுதி காலம் வரை தனித்தே வாழ்ந்தார். இது எவர்க்கும் புதிரான ஒரு விஷயம்.
தனது 68ம் வயதில் மார்ச் மாதம் 14ம் தேதி 1998ல் அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். மாநிலத்தின் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தாதாவின் துவக்கப் படங்களில் இருந்து கடைசி வரை நாயகியாக் இருந்த நடிகை உஷா சவான் புனேயிலிருந்து உடனடியாக வந்து கதரினார். '' எங்கு போனாலும் சொல்லிவிட்டுப் போவாய், இந்த முறை ஏன் சொல்லவில்லை'' என்று உரக்கக் கத்தி அழுதார்.
தாதாவின் மறைவின் போது அவரது மனைவியும் மகளும் அங்கு இருந்தனர். அவரது மகள் '' வாழ்ந்த காலம் முழுவதும் ஊர் மக்களையெல்லாம் சிரிக்க வைத்த நீங்கள் என்னை ஏன் ஏற்றுக் கொள்ளாமல் அழவைத்தீர்கள்?'' என்று கதரியதற்கு பதில் சொல்ல தாதா இல்லைதான் வழக்கம் போல் கேள்விகளை தவிர்த்து விட்டு தனது வேலைக்கு விரைவது போல் அப்பொழுதும் விரைந்து இருந்தார்.
கலைஞர்கள் வாழ்வில் சோகமும், கஷ்டமும் எத்தனை ழமாகவும் அதிகமாகவும் உள்ளதோ அத்தனை தீவிரமாகவே அவர்கள் செயல் பட்டு வந்திருக்கிறார்கள். சராசரிகள் தான் சிறிய விஷயங்களுக்காகவும் பெரிய அளவில் சோக கொண்டாட்டம் நடத்தி விடுகிறார்கள். இக்கட்டுரையின் துவக்க வரிகளாலே முடிக்கிறேன். மராத்தி திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் தாதா கோண்ட்கே. அவரது இடத்தை நிரப்ப இன்று யாரும் இல்லை.
--------------------------------------------------------------------------------------------------------

ராம் கோபால் வர்மாவின்

அன்பாதவன்
மதியழகன் சுப்பையா



சமீப்த்தில் வெளி வந்த இந்திய மொழிப் படங்களில் எண்பது விழுக்காடு திரைப்படங்கள் காதலை மையமாகக் கொண்ட கதைகளை உடையது. இன்னும் வித விதமாக காதலித்துக் கொண்டிருக்கிறனர். பாலிவுட் திரையுலகில் ஷாருக், சல்மான், மிர் என கான்களின் ராஜியம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. பார்முலாப் படங்கள் வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தது. பிரபல இயக்குனர் யஷ் சோப்ரா தனது முக்கோணக் காதல் கதைகளை இன்னும் விடாமல் அதே திரைக்கதையில் அவ்வப்போது மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ள நடிகர், நடிகைகளைக் கொண்டு படம் பண்ணி வருகிறார். இயக்குனர் டேவிட் தவன் தனக்கென்று ஒரு காமெடி பார்முலாவை வைத்துக் கொண்டு நாலாந்தர காமெடி இயக்குகிறார். காமெடி படம் என்பதால் நாம் சிரித்தே க வேண்டிய கட்டாயத்தில் சிரிக்கலாம் அல்லது திரையரங்கில் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்களே என்ற அச்சத்தில் நாம் சிரிக்கலாம். இயக்குனர் மகேஷ் பட்டின் குடும்பம் ஒட்டு மொத்தமாக பாசம் மற்றும் தகாத உறவுகளை வெளிப்படுத்தும் படங்களை மேற்கிலிருந்து காப்பியடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை. தவறி ஒரு சில நல்லப் படங்கள் வந்து விடுவது உண்டு னால் அவை வணிக ரீதியாக வெற்றிப் பெருவதில்லை.
மும்பையின் சாலையோரக் கடைகளில் பானிப்பூரியும், பேல் பூரியும் தின்றுத் திரியும் மனிதர்கள் கற்பனையிலும் கண்டிறாத இடங்களையும் உயர்வான வசதியான வாழ்வையும் காட்டிக் கொண்டிருந்த நிலையில் படம் பார்க்க வருபவர்களின் வாழ்ஹ்வை மொழியை சித்தரிக்கும் வகையிலான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கத் தவங்கினார் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வந்து மின் விசிரியை இயக்கச் சொல்லிக் கேட்கும் நாயகனிடம் ஏசி இயங்கிக் கொண்டிருப்பதாக வெயிட்டர் சொல்ல அப்படியானல் ஏசியை இங்க திருப்பி வை என கேட்டு தான் எதற்கும் சலைத்தவனில்லை என பரைசாற்றும் குடிசைப் பகுதி இளைஞன் பாத்திரத்தை சித்தரித்த வர்மா மும்பை வாழ் மக்களின் வாழ்வை அனுஅனுவாகத் தெரிந்தவர் என்பது பளிச்சிடும். மும்பையில் தாதாக்களின் அட்டகாசத்தையும் தாதாக்களுக்காக துப்பாக்கி தூக்கிய இளைஞர்கள் நிலை என்ன என்பதை இவரது படங்களில் காணக் கிடைக்கிறது. மும்பை தாதாக்களைத் தவிர வேரெதுவும் தெரியாதா என அனைவரும் சலித்துக் கொள்ளும் முன் அவர் தனது திறமைகளை திரையில் காட்டத் துவங்கி விட்டார்.
சென்னைத் தமிழ் என்பது போல மும்பைக்கென ஒரு தனி மொழி உள்ளது. 'பம்பையா' எனப்படும் இந்த மொழியை வர்மாவின் திரைக்கதாப்பாத்திரங்கள் இயல்பாய் பேசி நடிப்பதை பார்த்த மக்களுக்கு கொண்டாட்டம் தான்.
தனக்கு பிடித்த இயக்குனர்களாக ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் மற்றும் பாலிவுட்டின் இயக்குனர்கள் சேகர் கபோர், கோவிந்த் நிகலானி போன்ற பலர் இருந்தாலும். இவர்கள் யாருடைய பாதிப்பும் வர்மாவின் படங்களில் இல்லை. ' திரைப்படம் பார்ப்பவர்கள் மற்றும் விமர்சகர்கள் கியோரின் அபிப்ராயங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்களுக்கு எனது படங்கள் பிடிக்க வேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. எனக்கு பிடித்தமான ஸ்டைலில் படத்தை இயக்கி வருகிறேன்' என்று முழங்குகிறார் வர்மா.
ராம் கோபால் வர்மா துணை யக்குனராக 'ராவ்கரிலு' மற்றும் 'கலெக்டர் கரி அப்பாய்' கிய படங்களில் பணியாற்றினாலும் அதில் இவரது பங்கு ஒன்றுமில்லை. தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் நாகர்ஜுனாவிடம் தனது' சிவா' படத்தின் கதையைச் சொல்ல அவருக்குப் பிடித்துப் போனது. இப்படத்தை நடிகர் நாகர்ஜூனா தயாரித்தார். இப்படம் தமிழில் ' உதயம் என்றும் இந்தியில் 'சிவா' என்றும் மொழிமாற்றப் பட்டு வெளியிடப் பட்டது. னால் தெலுங்கில் வணிகரீதியாக அடைந்த வெற்றி பிற மொழிகளில் இல்லை. னாலும் ஒரு கல்லூரி மாணவன் வன்முறைக்கு தள்ளப் படுவதும் அப்பகுதியின் பிரபல தாதா (நடிகர் ரகுவரன்)வுடன் மோதும் காட்சிகளிலும் புதிய பாணி இருந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.

வர்மா தெலுங்கு படங்கள் இயக்குவதில் ர்வம் காட்ட துவங்கினார். அவர் இயக்கியப் படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றது. தாதாக்களின் ராஜ்யங்களை வெளியுலகுக்கு கொண்டுவரும் விதமான படங்கள் இயக்குவதில் இவருக்கு நிகர் இவரே. நடிகர் ஜெகபதிபாபு மற்றும் நடிகை ஊர்மிளா மாடோன்ட்கர் கியோர் நடித்த 'காயம்' படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 'வர்மா கார்பரேசன் லிமிடேட்' என்ற திரைப்பட தயாரிப்பு கம்பெனியை ரம்பித்தார். இதன் மூலம் 'மனி மனி' 'குலாபி' 'வொ·ய்ப் ப் மிஸ்டர் வரபிரசாத்' 'தெய்யம்' என வரிசையாக தெலுங்கு படங்களை தயாரித்தார். இந்தி பட உலகில் 'ரங்கீலா' படம் மூலம் மிகப் பிரபலமான இயக்குனராக அங்கிகாரம் பெற்றார். வர்மாவின் படங்களில் வழக்கமான படங்களின் திரைக்கதையமைப்பு மற்றும் கவர்ச்சி மசாலா போன்ற அயிட்டங்கள் இல்லாமல் எதார்த்தமான முறையில் பாத்திரப் படைப்பும் காட்சியமைப்பும் கொண்டு இயக்குவது இவருடைய சிறப்பு.
நிழலுலக தாதாக்களின் வாழ்வை மையமாக வைத்து இவர் இயக்கிய 'சத்யா' படம் திரையுலகையில் ஒரு புதிய பாணியை ஏற்படுத்தியது. இப்படத்தை தழுவி பல படங்கள் பாலிவுட்டில் இயக்கப் பட்டன. 'சத்யா' படத்தில் நடித்த மனோஜ் பஜ்பாய், சக்ரவர்த்தி, மகரண்ட் தேஷ்பாண்டே போன்ற நடிகர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தப் படம் அடே நேரத்தில் இசையமைப்பாளர் சந்திப் சவ்தா மற்றும் இப்படத்திற்கு வசனம் எழுதிய அனுராக் காஷ்யாப் கியோருக்கும் வாழ்வளித்தப் படம். வசனகர்த்தா அனுராக் காஷ்யாப் மணிரத்னத்தின் 'யுத எழுத்து' இந்தி பதிப்பின் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது. அனுராக் காஷ்யாப் இயக்கிய 'பிளாக் பிரைடே' படம் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் பிரபல தாதாக்களின் வாழ்வை மையமாக வைத்து 'கம்பனி' 'D' போன்ற படங்களை இயக்கிய இவருக்கு பல முறை கொலை மிரட்டல்களும் வந்துள்ளது.

எதிலும் புதுமை செய்ய நினைக்கும் வர்மா குறும்படங்கள் மீது தனியாத ர்வம் கொண்டவர். அவர் குறும்படங்கள் இயக்கத் திட்டமிட்டாலும் அவற்றின் குறைந்த காலம் கருதி அவற்றி திரையங்குகளில் திரையிட இயலாது போகும் என று குறும்படங்களை கொத்தாக்கி ஒரு படத்தை தயாரித்தார். ' டர்னா மனா ஹை' என்ற படத்தில் இருபது நிமிடங்கள் ஓடக் கூடிய று கதைகளை வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்கி வெற்றி கண்டார். இப்படத்தில் பாடல்கள் இல்லை. மேலும் பாடல்களும் இடைவேளையும் இல்லாமல் ஓடக் கூடிய ஒரு மணி நேரப் படம் ஒன்றையும் தயாரித்தி இயக்கி உள்ளார். வர்மாவின் அபிமான நடிகையான ஊர்மிளா மாடோன்ட்கர் மற்றும் மனோஜ் பாஜ்பாய் நடித்த 'கோன்' என்றப் படம் திகிலடையச் செய்யும் ஒருமணி நேரச் திரைச் சித்திரம்.
புதிய பல இயக்குனர்களை அறிமுகப் படுத்தி வரும் ராம் கோபால் வர்மா. பல சோதனை முயற்சிகளை தனது படத்தில் செய்துள்ளார். ஊர்மிளா மாடோண்ட்கருக்குப் பின் வர்மாவின் ஸ்தான நடிகையான அந்த்ரா மாலி நடிக்க இவர் இயக்கிய 'மைன் மாதூரி திஷித் பன்னா சாஹத்தி ஹ¥ன்' என்ற படத்தில் கிராமத்துப் பெண் ஒருத்தி பெரிய நடிகையாக வேண்டும் என்ற சையில் திரையுலகில் வந்து திண்டாடுவதை மிக எதார்த்தமாக காட்சிப் படுத்தி உள்ளார். இப்படம் திரையுலகில் காலடி டுத்து வைக்க நினைப்போருக்கு ஒரு எச்சரிக்கைப் படமாக உள்ளது எனலாம்.

மேலும் தனது லட்சியப் படமாக 'நாச்' என்ற படத்தை மீண்டும் அந்த்ரா மாலியை வைத்து இயக்கினார். இதில் லட்சிய வெறி கொண்டு நடனத்தில் பல புதிய உத்திகளை செய்ய நினைக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை மிக தெளிவாக படம் பிடித்து உள்ளார். இப்படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை னால் நிறைய திருப்தி தந்தது என வர்மா சந்தோஷம் தெரிவித்து உள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபல 'காட் பாதர்' திரைப்படத்தை தழுவி நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் கியோர் நடிக்க 'சர்கார்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேவின் வாழ்வை மையமாகக் கொண்டது என பேசப் பட்டது னால் அது அப்படி இல்லை என இரு தரப்பினரும் மறுத்துள்ளனர். 'சர்கார்' படம் துவங்கும் முன் தான் ' காட் பாதர்' படத்தின் பாதிப்பால் அப்படத்தை தழுவி இயக்கி இருப்பதாக டைட்டில் போட்டு விட்டு படத்தை துவக்குகிறார். இந்தப் படத்திலும் பாடல்கள் இல்லை.

பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வர்மாக தனது ஸ்தான இசையமைப்பாளர் சந்திப் சவ்தாவுடன் பல மணி நேரங்களை செலவழிக்கிறார். புதிய பல இளைய இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி தனது பட இயக்க நிறுவனத்திற்கு 'பேக்டரி' என பெயரிட்டுள்ளார். எப்பொழுதும் புதிய இயக்குனர்களை உடன் வைத்துக் கொண்டு புதிய பாணியில் கதை சொல்ல முயன்று வருகிறார்.

இவரது படங்களில் புது முகங்களுக்கு நிறைய வாய்ப்பு தருகிறார். இவரது இயக்கத்தில் நடித்த பல நடிகர்கள் சிகரம் தொட்டு விட்டனர். குறிப்பாக மனோஜ் பாஜ்பாய், ரஜ்பால் யாதவ், விவேக் ஒபராய், மற்றும் அப்தப் சிவ்தஷனி கியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

'சிவா' மற்றும் 'ஷானாஷனம்' கிய படங்களுக்காக சிறந்த இயக்குனருக்கான 'நந்தி' விருது இருமுறை பெற்றுள்ளார். மேலும் 'சத்யா' படத்திற்காக பிலிம்பேர் விருதும் பெற்றிருந்தாலும் விருதுகளுக்கா தான் படம் இயக்குவதில்லை என்றும் திரைப்படங்கள் தன்னை உற்சாகப் படுத்துகின்றன அதனால் இயக்குகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இவர் சினிமா அமைப்புகள் மற்றும் பத்திரிக்கைகள் வழங்கும் விருதுகளை ஏற்பதில்லை. மேலும் விருது விழாக்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுமில்லை.

வன்முறை, மர்மம், திகில் கிய விஷயங்களை தாரமாகக் கொண்டே இவர் தனது எண்பது விழுக்காடு படங்களை இயக்கி உள்ளார்.
சமீபமாக பிரபலமான பழைய திரைப்படங்களை புதிய தலைமுறை நடிகர்கள் கொண்டு இயக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். பாலிவுட் திரையுலகில் இதுவே புதிய டிரெண்டாக உள்ளது. உலகப் புகழ் பெற்ற 'சோலே' படத்தை ரீமேக் செய்து வருகிறார். மேலும் திரைப்படத்தில் 'ஐய்ட்டம் சாங்' எனப்படும் புதிய பாணி பாடல் நடனத்தை துவக்கி வைத்தவர் வர்மா. இப்படி பல விஷயங்களை தனது படங்களில் அறிமுகப் படுத்தி வந்த வண்ணமுள்ளார்.

சில நடிகளைகளோடு கிசுகிசுக்கப் பட்ட இவர் பெண்களை அங்கிகரிப்பதில்லை. ' புத்திசாலித்தனமான பெண்களை தனக்குப் பிடிக்காது எனவும் எனக்கு அறிவுரையும் லோசனையும் வேண்டுமெனில் புத்தகங்களை படித்துக் கொள்வேன் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். வருடத்திற்கு இருபது படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் வர்மாவின் 'பேக்டரி' இயக்கம் இன்று பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக பதிவு பெற்று விரைவில் பங்கு மூலதனமும் திரட்டப் பட இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. சிறிய சந்து பொந்துகளில் பெரிய கதைகள் உள்ளன. வெளியே வர இயலாமல் சிறந்த இயக்குனர்கள் பலர் உள்ளார்கள் அவர்களை வெளியில் கொண்டு வருவதுதான் என் வேலை அதனால் நல்ல கதையிருந்தால் திறமையிருந்தால் உடனடியாக என்முகவரி தேடி வாருங்கள் என பேட்டி ஒன்றில் அழைப்பு விடுத்து இருக்கும் வர்மா வித்தியாசமானவர்.

இன்று ஐந்து நட்சத்திர ஹொட்டல்களின் ஏழாவது மாடியில் குளிர்பதன அறைகளில் அமர்ந்து மதுப்பொத்தல்களில் ஊறி கதை தேடும் இயக்குனர்கள் மத்தியிலும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் பணமும் தேடி பஞ்ச் டயாலாக் பேசும் நடிகர்கள் மத்தியிலும் எதார்த்தமான பாத்திரங்களை உலவ செய்யும் இயக்குனர் வர்மா, திரைப்படங்களை மக்கள் வாழ்வின் பிரதிபலிப்பாகவே இருக்க வேண்டும் என்கிறார். மேலும் தொழில் நுட்பங்களும், பிரமாண்ட செட்களும் இருந்தால் மட்டும் போதாது மக்கள் சந்தித்த சம்பவமும் வாழ்க்கை எதார்த்தமும் அவர்கள் பேசும் பண்படாத மொழியும் தான் தனது படத்திற்கான பலம் என அவர் தெரிவிக்கிறார்.

லை-லை வர்மாவின் பேக்டரி சங்கொலி முழங்குகிறது. ர்வமும், திறமையும் உள்ளவர்கள் படையெடுங்கள் ராம் கோபால் வர்மாவின் ராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது.

இந்தி சினிமாவும்

அன்பாதவன்
மதியழகன் சுப்பையா



இந்தியர்களின் பண்பாடு, மொழி, உடை, நாகரீகம் என அனைத்தும் வெளிநாட்டவருக்கு வெள்ளித் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள் திரைப்பட இயக்குனர்களே. அதிலும் இந்தித் திரைப்படங்கள். இந்தியர்கள் மரியாதை மிக்கவர்களாகவும், மனிதாபிமானிகளாகவும், அழகானவர்களாகவும், உழைப்பாளிகளாகவும் இன்னும் பலப்பலவாகவும் வெளிநாட்டவர்கள் அறிந்தும் புரிந்தும் கொள்ள காரணமாய் இருப்பவர்களாக இந்தி திரைப்பட இயக்குனர்களைத்தான் சொல்ல வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களை நம்பி எடுக்கப் படும் திரைப்படங்கள் இங்கு அதிகம். இந்திய பாரம்பரிய குடும்பங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிநாட்டவர்களுக்கு அரும்விருந்து. இதனை பரிமாற இந்திய இயக்குனர்கள் போராடி வருகின்றனர்.

இந்திய நாட்டை விட்டு பிழைப்புக்காக வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டவர்களாகவே குடியுரிமை பெற்று விட்டாலும் அவர்களால் தங்கள் இந்திய நாட்டின் எதையும் மறக்க முடியவில்லையாம். அவர்கள் விடுமுறைகளில் இந்தியா வருவதும் இங்கு பன்னாட்டு சந்தைப் பொருட்களை பயன் படுத்தி பந்தாக் காட்டுவதும் ஒருபுறம் இருந்தாலும் கலைகள் அவர்களின் மதிப்பீடுகளால் தான் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. அனைத்து விதமான கலைகளுக்கும் காசு கொடுத்து காப்பாற்றி வருவது இந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான். வணக் காப்பகங்களாகட்டும், கலையமைப்புகளாகட்டும் இல்லை கல்வி கலாச்சார அமைப்புகளாகட்டும் நிதி வழங்கி வாழ வைத்துக் கொண்டிருப்பது இந்த வெ.வா.இந்தியர்கள்தான். அதிக பொருட் செலவில் தயாரிக்கப் படும் பாலிவுட் திரைப்படங்கள் இவர்களை மகிழ்விக்கவும் இவர்களால் காசு சம்பாதிக்கவுமே சமீபமாக எடுக்கப் படுகிறது.
' ஹம் ப்கே ஹை கோன்' (1994) என்ற திரைப்படம் திரையுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. திரையறங்குகளில் வருடத்திற்கும் மேல் ஓடியது. இயக்குனர் கோவிந்த மூனிஸ் இயக்கிய போஜ்பூரி படம் ' நதியா கே பார்' (1982) என்ற படத்தின் கதையை அப்படியே நகலெடுத்து இயக்குனர் சூரஜ் ர். பார்ஜாத்யா இயக்கியப் படம் தான் 'ஹம் ப்கே ஹை கோன்'. இப்படத்திற்கான திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் பொறுப்புகளை ஏற்றுச் செய்த இயக்குனர் பார்ஜாத்யாவுக்கு இந்த பணிகளை செய்து முடிக்க று ண்டுகள் னதாம். ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் கதையை மறுபடியும் படமாக்க இத்தனை கஷ்டப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.
நாயகனின் அண்ணன் மனைவி இறந்து விடுகிறாள். நாயகனுக்கும் அண்ணியின் தங்கைக்கும் இடையில் காதல். அண்ணனுக்கு கொழுந்தியாளுடன் மறுமண ஏற்பாடு. இறுதியில் அண்ணன் தம்பிக்கு விட்டுக் கொடுப்பதாக அமைந்த குடும்ப சிக்கல். இந்த கதைக்கு இப்படி ஒரு வெற்றிக்குக் காரணம். இந்திய மக்களிடையே உடைந்து போன கூட்டுக் குடும்ப பந்தங்கள். குடும்ப கொண்டாட்டங்கள். இவை திரைப்படங்களில் பிரமாண்டமான செட்களுடன் காட்டப் படும் போது மக்கள் மகிழ்கின்றனர். இந்த சூத்திரத்தை வைத்துக் கொண்டு நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகி உள்ளது.
சமீபமாக வந்த பாலிவுட் படங்களின் கதையமைப்பும் படப்பிடிப்பும் வெளிநாட்டில் தான். வெளிநாடு வாழ் இந்திய மக்களின் வாழ்வையை மையமாகக் கொண்ட கற்பனைக் கதைகளை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டுள்ளன. பிரபல இயக்குனர் மற்றும் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய படத் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் யஷ் சோப்ரா, இதுவரையிலான தனது அனைத்துப் படங்களிலும் எதாவது ஒரு காரணத்தை கதையில் வலியத் திணித்து சுவிட்ஜர்லாந்து சென்று படபிடிப்பு செய்யும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். உதாரணமாக 'கபி கபி', 'சில்சிலா' 'சாந்தினி' 'டர்' 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' இன்னும் பலப்பல. சமீபமாய் அவர் தனது பழக்கத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து வேறு நாடுகளுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்துகிறார். ஐரோப்பியாவில் படம் பிடிக்கப் பட்ட 'ஹம் தும்' , முழுக்க முழுக்க ஸ்திரேலியாவில் படம் பிடிக்கப் பட்ட 'சலாம் நமஸ்த்தே' தற்போது வெளியாக இருக்கும் 'தர ரம் பம்' வரை படத்தின் மிகு விழுக்காடு காட்சிகள் வெளிநாட்டில் படம் பிடிக்கப் பட்டவைதான்.
இப்படியாக இயக்குனர் கரன் ஜோகரின் அனைத்துப் படங்களும் எதாவது ஒரு வகையில் வெளிநாட்டில் கதை நிகழ்வது போல் அமைக்கப் படுகிறது. இயக்குனர் சஞ்ஜய் லீலா பன்சாலி, அசுதோஸ் குவாரிகர், பர்ஹன் அக்தர் இப்படி அனைத்து முன்னனி இயக்குனர்களும் தங்கள் கதைகள் இந்தியாவில் தொடங்கி வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டில் தொடங்கி இந்தியாவில் என்று இருக்கும்படியாக பார்த்துக் கொள்கின்றனர்.
'அஜ்னபி' என்றோர் படம் வெளிநாட்டில் வாழும் இந்திய நண்பர்கள் இருவர் தங்கள் மனைவியரை மாற்றிப் புணருவது போன்ற கதையமைப்பில் உருவாக்கப் பட்டது. இவ்வாறான மட்டரக சிந்தனையோட்டமுள்ள படம் தோல்வியைத் தழுவவில்லை மாறாக முதலுக்கும் அதிகமாக பணம் பார்த்து விட்டார்கள். இவ்வாறாக இந்தியர்களால் உருவாக்கப் படும் படங்கள் இந்தியாவின் பண்பாட்டை வெளிப் படுத்துவதாக அமைகிறது. மக்களின் நாகரீகம், கலை, பழக்க வழக்கம் என திரைப்படங்களில் பதிவு செய்யப் படும் விஷயங்களே உலக அரங்கில் திரையிடுகையில் பிற நாட்டு மக்களைச் சென்றடைகிறது. இவ்வாறான படங்களைக் பிறநாட்டு மக்கள் இந்தியா இத்தகை நாடா என வியக்கவும் இல்லை வருத்தப் படவும் காரணமாக இருக்கிறது.
இந்தியாவின் நகரங்கள் இன்று ஓரளவு நாகரீகம் பெற்றிருக்கிறது. னால் இதனை முழுமையான நாகரீகம் என்று சொல்லி விட முடியாது மக்களின் பழக்கவழக்கங்களில் கொஞ்சம் மாற்றம் இருக்கத்தான் செய்கிறது னால் பாலிவுட் படங்களில் காட்டப் படும் அளவுக்கு மாற்றமில்லை. கோடி கணக்கான ரூபாய்களை செலவு செய்து குடியிறுப்புகள், உடையலங்காரங்கள் மற்றும் வாழ்வு முறைகள் என அனைத்திலும் ஒரு பகட்டு காட்டப் படுகிறது. இதுதான் இந்தியாவின் இத்தகைய நிலை. இதுதான் இந்திய மக்கள் என பதிவு செய்யப் படுகிறது.
' இந்தியா கிராமங்களின் நாடு இங்குள்ள மக்கள் மேற்கத்திய டைகள், நாகரீகங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் பார்திருக்க மாட்டார்கள். உலக சினிமா ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டுமே திரையிடப் படுகிறது. அதனால் தான் எனது படங்களில் நான் நவ நாகரீகத்தையும் மிகையான டைகள் மற்றும் கவர்ச்சி காட்சிகளையும் வைக்கிறேன். பாமரர்களால் இவற்றை கற்பனை கூட செய்ய முடியாது. நான் அவற்றை அவர்களின் கண்முன் காட்சிப் படுத்துகிறேன்' என்றார் பிரபல இயக்குனர் ராஜ் கபூர். னால் தற்போதைய இயக்குனர்கள் இவ்வாறு எந்த விளக்கமும் கொடுக்க தயாராக இல்லை. தங்கள் தவறுகளை நியாப் படுத்துவதோ அதற்கு விளக்கம் தருவதோ கூட இல்லை.
இந்தியாவின் உறவு சிக்கல்களைக் காட்ட செல்வம் கொழிக்கும் ஒரு குடும்பத்தையும் அரண்மனையில் வாழும் படியான சூழலையும் காட்டி படம் பிடிக்கின்றனர். இதனை காணும் வெளிநாட்டவர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி கிடைக்கிறது. நாலாந்தர உறவு சிக்கல்களும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை பிரச்சனைகளும் பார்க்கக் கிடைக்கிறது. னால் இவ்வகைப் படங்கள் நம் நாட்டு பண்பாட்டின் குறியீடாக இருக்கிறது.
இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலும், மக்களின் வாழ்க்கை சூழலும் பதிவு செய்யப் படாமலேயே இருக்கிறது. எதார்த்தத்தை பதிவு செய்வதாக சிலர் கிளம்பினாலும் அதில் மிகை புனைவு செய்து விடுகின்றனர். கோடிகளில் செலவு செய்தே தீருவோம் என்ற அடம்பிடிப்பின் காரணமாக நல்லக் கதைகளிலும் நஞ்சு கலந்து விடுகிறது. பாலிவுட் படங்கள் ஒன்று மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு கதைகளை அமைத்துக் கொள்கிறது அல்லது வெளிநாட்டு தொடர்புடைய கதைகளை தேர்ந்து கொள்கிறது. எழுத்தாளர் ஜும்பா லஹிரி எழுதிய ' நேம்ஷேக்' நாவல் இயக்குனர் மீரா நாயரால் திரைப்படமாக்கப் பட்டது. இந்தப் படமும் இந்தியாவிலிருந்து நியுயார்க் நகரில் குடிபெயர்ந்த வங்காளி குடும்பத்தின் கதை. வங்காளத்தின் அடையாளத்தை இழக்காமல் இருக்க குடும்பம் முயற்சிக்க குடும்பத்தின் வாரிசோ நியுயார்க் நகர நாகரீகத்தின் வாழ் விரும்புவதாகவும் இதனால் உருவாகும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் சுறுக்கக் கதை.
இதற்கு முன் கால்பந்தாட்ட ர்வம் கொண்ட பஞ்சாபி குடும்பத்தின் இளம் பெண் தனது விளையாட்டு பயயிற்சியாளராக இருக்கும் வெளிநாட்டவரை நேசிப்பது குறித்த மற்றும் வெளிநாட்டவர்களைப் போல் குட்டைப் பாவாடை அணிந்து விளையாடுதலுக்கு குடும்ப எதிர்ப்பு என படத்தின் கதை செய்யப் பட்டிருந்தது. விருதுகள் பெற்ற நல்லபடம் இது. னால் வண்ணங்களும், வாழ்க்கையும் இந்தியாவில் கொட்டிக் கிடக்க இந்திய இயக்கினர்கள் அனைவரும் வெளிநாட்டு தொடர்ப்பு படங்களையோ இல்லை வெளிநாட்டில் விலை போகும் இந்தியக் குடும்பக் கதைகளையோ படமாக்குவது ஏன் என்றுதான் விளங்கவில்லை.

புறத்தே ஒளிந்திருக்கும் துளி விஷம்

மதியழகன் சுப்பையா

நல்ல பாம்புகள் நல்லவகைகளா? என்ற கேள்வி அபத்தமானதாக இருக்கலாம் னால் நல்ல பாம்பு என்று அழைக்கப் படுவதனால் அது பெயருக்கேற்ப குணமுடையதாக இருந்து விடுவதில்லை. அழகும் பளபளப்பும் பெற்று படமெடுத்து டுகையில் பயத்தை உண்டு பண்ணும் அவை வாய்க்குள் விஷம் வைத்திருக்கும். மேல் தாடையிலுள்ள பையிலிருக்கும் விஷத்தினை தனது பல்லூசியால் உடலில் ஏற்றும். நல்ல பாம்பின் கடி நல்ல கடிதானே என விட்டோமென்றால் உயிரை விட வேண்டியதுதான்.
பாம்புகளைப் பொறுத்து விஷத்தின் வீரியமும் பாதிப்பும் மாறுபடுகிறது. குமுகாயத்தில் விஷம் ஏற்றும் பாம்புகளை மக்களும் மக்களைத் தேடி பாம்புகளும் வந்து அழிவுகளை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. சில பாம்புகளின் விஷம் மெல்லக் கொல்வன. அவை உறுப்புகளை சிதைத்து தவனைமுறையில் கொல்லும்.
திரைப்படங்கள் சமுத்தாயத்தை பிரதிபளிக்கிறதா இல்லை சமுதாயம் திரைப்படங்களையா என்ற பட்டிமன்ற வாத விவாதங்களை பொழுது கடத்த பேசுவதை தவிர்த்து க்கமாக சில சிந்திக்கலாம். தமிழ் திரைப்பட வரலாற்றில் சில இயக்குனர்களின் நுழைவு சிறப்பாக பதிவு செய்யப் பட்டுள்ளது. சிகப்பு கொடி பிடித்தபடி திரையுலகில் நுழைந்தவர்கள் கட்டுப்பாட்டு காற்றரைகளில் தொடர்ந்து இருக்கவே சிகப்பு வெளுத்து காவியாகி விட்டிருக்கிறது.
அவ்வப்போது தொம்மென குதித்து பெரும் வட்ட அலைகளை உருவாக்கிய பல இயக்குனர்கள் அவரவருக்கான தனித்தனி திரைமொழிகளை உருவாக்கி விட்டுப் போய் உள்ளனர். அறிவுஜீவிக் குழுக்களுக்கு இவ்வியக்குனர்களின் திரைப்படங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என்று புரியலாம். னால் மிகு விழுக்காட்டில் இப்படங்களைப் பார்க்கும் கீழ்த்தட்டு மக்களுக்கு இவை படத்தில் சொன்னபடி புரிவதில்லைதான். வீட்டில் திரியும் பெருச்சாலிகள் மனிதகளை கடிக்கும் போது ஊதி ஊதி கடிக்கும் தன்மை கொண்டது. சில இயக்குனர்களின் படங்களும் இவ்வாறான எலிக்கடிகள்தான்.
யானைக்கும் அடி சறுக்கும். பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அமீர் என்னும் யானைக்கு அடி சறுக்கி உள்ளது. அமீரை யானை என்று சொல்வதா வேண்டாமா என்பதும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இன்று நகரம் தொடங்கி பட்டித் தொட்டிகளில் எல்லாம் பரபரப்பாக பேசப் பட்டும் கொண்டாடப் பட்டும் கொண்டிருக்கும் பருத்தி வீரன் திரைப்படத்தில் மக்கள் கண்டதும் ரசிகர்கள் ரசித்ததும் என்ன? அவர்களுக்கே தெரியாது.
சண்டித்தனம் பொறுக்கித்தனம் என்ற இருவார்த்தைகளும் பொருளில் வேறுபடுபவவை பருத்திவீரன் திரைப்படத்தின் நாயகன் படத்தில் சண்டியர் என்று விளிக்கப் பட்டாலும் அவன் செல்வதெல்லாம் பொறுக்கித்தனம்தான். சண்டியர்கள் முரடர்களாகவும் முன்கோபிகளாகவும் வாயால் பேசாமல் கையால் பேசும் இயல்புடையவர்களாகவும் பலசாலிகளாகவும் மட்டுமே இருப்பார்கள் என்பது முன் தலைமுறையினர் கொடுக்கும் விளக்கம். இப்படியாயின் பருத்திவீரன் தரமுத்திரைக் குத்தப்பட்ட பொறுக்கியாகவோ அல்லது 'லும்பனாகவோ' முத்திரைக் குத்தப் படுகிறான்.
லாரி ஓட்டுனர்கள் மிரட்டி அவர்கள் அழைத்து வரும் விபச்சாரியுடன் ஓசியில் ஒதுங்கிக் கொள்ளும் மட்டரகமான குணாம்சமாக காட்டப் படுகிறது. இந்த இடத்தில் இயக்குனர் வைத்திருக்கும் அரசியல் வியக்கத் தக்கது. ஜாதி மாறிப் பிறந்தவனை உயர் ஜாதிக்காரர்கள் சேர்த்துக் கொள்ளாத காரணத்தால் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பொறுக்கியாக வாழ்கிறான். இந்நிலையில் லாரி ஓட்டுனர்களாக வரும் பாத்திரங்கள் இவனை அண்ணன் என்று அழைக்கின்றன. மேலும் தாங்கள் அழைத்து வந்தப் பெண்ணுடன் உறவு கொண்டது போல் நீங்கள் அழைத்து வருகையில் எங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கின்றன். இந்த ஒப்பந்தத்திலிருந்து லாரி ஓட்டுனர்களாக வருபவர்கள் பருத்தி வீரனின் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. இவ்வாறான ஜாதியினர் தான் இத்தகை செயல்களில் ஈடுபட முடியுமென்றும் இவ்வாறான ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடியுமென்றும் சொல்வதாக புரியாதவர்களை என்ன சொல்லலாம்.
இறுதிக் காட்சியில் இந்த லாரி ஓட்டுனர்களாலேயே உயர்ஜாதி நாயகி வன்புணர்ச்சி செய்யப் படுகிறாள். இவ்வாறான ஜாதி கெட்டப் பயலோடு ஓடினால் உனக்கு இதுதான் கதி என தான் தரவளிக்கும் உயர்ஜாதி மக்களுக்கும் அவர்தம் மகள்களுக்கும் அறிவுறை கூறுகிறாரோ? ' நீ என்ன பெரிய சண்டியரா? என்று நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கையில் உன் ஜாதிக்காரன் எப்பொழுதுமே சண்டியராக முடியாது என்ற தொனியில் கேட்பதாக இல்லையா? குண்டியில் குத்துப் பட்டு அவமானப் பட்டாலும் தனது சிஸ்யர்களுடம் மிடுக்காக இருக்கும் குஸ்தி வாத்தியார்தான் சண்டியர். இதைத் தானே சொல்ல வருகிறார் இயக்குனர். இல்லையா?
ஜாதி தாழ்ந்தவன் , ஜாதி கெட்டவன் எனப்பட்டவர்களுடன் வாழ நினைக்காதே இதுதான் உனது கதி என்பதுதான் படத்தின் உட்கருத்தாக புரியப் படுகிறது. கத்தியெடுத்தவன் கத்தியால் சாவான் என்றால் பருத்திவீரன் கொல்லப் பட்டிருக்க வேண்டும். இங்கு பாவத்தின் பலனை அனுபவிப்பது பருத்திவீரனை நேசித்த முத்தழகுதான்.
இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாதபடிக்கு அரவாணிகளையும் அவர்தம் கலை ஈடுபாட்டையும் காட்டி இருப்பதாக பிரபல விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். னால் ' ஏன் கையில வைச்சிக் கிட்டு சும்மா நிக்கிறீங்க, வாயில வைச்சு ஊதுங்க, நீங்க ஊதுரீங்களா இல்ல நான் ஊதட்டுமா?'' என்ற ஒரு வசனத்தை எழுதி படப்பிடிப்பின் போது சொல்லிக் கொடுத்து பத்து டேக்குகள் வாங்கி பதிவான இந்த வசனம் தெரியாமலோ தற்செயலாகவோ அமைந்திருக்க முடியாதுதான். படத்தில் அதிகபடியான அரவாணிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதாக ஒருவர் சந்தோஷம் அடைந்துள்ளார். அவர்கள் அத்தனை அவமானப் படுத்தப் பட்டிருப்பதாக வருத்தம் கொள்ளத்தான் முடிகிறது.
எதார்த்தமாக படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் இப்படி கூத்தடிக்கலாமோ. அரவாணிகளுக்கு சமூகம் அத்தகை மதிப்பைத் தான் கொடுக்கிறது எனவும் அரவாணிகள் அவ்வாறுதான் பேசித் திரிகிறார்கள் எனவும் இதுதான் நடைமுறை எனவும் இயக்குனர் விளக்கம் சொல்வாரேயானால் அவர் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது.
தன் மகள் ஓடிப் போய் விட்டதை விடவும் அவள் ஜாதிகெட்டவனோடு ஓடிப் போய் விட்டாள் அதனால் அவனை வெட்டு என அலையும் கூட்டத்தை காட்டி இயக்குனர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார். இனி சமூகத்தில் கலப்பு திருமணங்கள், ஜாதி மாறிய காதல் திருமணங்கள் நடக்கக் கூடாது எனவும் அப்படி உங்கள் மகளோ தங்கையோ ஓடிப் போய் விட்டால் அவர்களை விட்டு யாருடன் ஓடிப் போனாலோ அவனை வெட்டு என்று அரிவாள் தூக்க சொல்லிக் கொடுக்கிறாரோ. இதில் பருத்தி வீரனின் சித்தப்பாவாக வரும் செவ்வாழை மற்றும் அப்பாத்தாளை கவனமாக தப்பிக்க விட்டிருப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு யாரும் விளக்கம் தர முன் வர மாட்டார்கள் தான்.
கலையை ரசித்து விட்டுப் போக வேண்டும் இப்படி பூதக் கண்ணாடி கொண்டு குத்தி கிளரி பார்க்கக் கூடாதுதான் னால் இவ்வாறான கலைப் பதிவுகளை தனது காம்பாவுண்டுக்குள் மட்டும் காட்டாமல் பட்டித் தொட்டிகளில் எல்லாம் போட்டுக் காட்டுவதனால்தான் இந்த படபடப்பு.
இயக்குனர் அமீரின் ''ராம்'' என்றப் படத்தில் நாயகனின் தாய் கொல்லப் படுகிறாள். அவளைக் கொன்றவனைப் பழிவாங்கக் கிளம்புகிறான் நாயகன். இதுவரை சரி னால் பழிவாங்க செல்லும் முன் காவி அடை தரித்து புகை மூட்டத்தினுள் புகுந்து பிரகாரம் சுற்றுவதும், மலை உச்சியில் ஒற்றைக் கால் தவம் செய்வதும், இந்து மதக் கடவுள்கள் சம்காரம் செய்யும் முன் மேற்கொள்ளும் உக்கிர நடவடிக்கைகளைப் போல் செய்வதும் என காட்டியிருப்பது எதற்காக. மதத்தினை வலிய திணிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லையே.
பருத்திவீரன் படத்திலும் நாயகன் மனம் திருந்தி நாயகி முத்தழகின் காதலை ஏற்று அவளை பெண் கேட்க செல்லும் முன் திருநீர் இட்டுக் கொள்வது எதைக் காட்டுகிறது. ஒருவன் திருந்த வேண்டுமாயின் மதம் துணையாய் இருக்க வேண்டும். திருநீர் என்னும் புனிதசாம்பல்தான் அவனைத் தூய்மை படுத்த வேண்டும். இது எத்தனை திட்டமிட்டச் செயல். இப்படி தனது திரைப்படங்களை மதங்களுக்கு தரவு காட்டி வருகிறார் இயக்குனர். மார்பில் குத்துபவரை எதிர் கொள்ளலாம் அவர்கள் குறித்து பயமில்லை னால் உறவாடிக் கொல்பவர்களிடம் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இயக்குனர் அமீர் மட்டுமல்ல இந்த வரிசையில் இன்னும் பல முன்னனி இயக்குனர்களைச் சேர்க்கலாம்.
இந்தப் படத்தினை மிகு எதார்த்தத்தோடு படம் பிடித்து இருப்பதற்காகவும் கதாபாத்திரங்கள் மிக இயல்பாக பேசி நடித்திருப்பதற்காகவும் மட்டும் பாராட்ட வேண்டுமானால் பாராட்டிக் கொள்ளலாம். னால் அதுவும் புதுமையில்லை. இதற்கு முன் இதை விடவும் எதார்த்தமான படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளன. பருத்திவீரன் படத்தின் சண்டைக் காட்சிகளைப் பார்க்கையில் அவை எதார்த்தமானவையாக நம்ப முடியவில்லைதான். கேட்டால் நாங்கள் கலையை வளர்க்க மட்டுமல்ல காசு பார்க்கவும் வந்துள்ளோம் என்று விளக்கம் கொடுத்து விடுகின்றனர். ' சரிகமபதனி சொல்லித்தரேன்' பாடலும் கற்பனைக்கு அப்பார்ப்பட்ட பலத்துடன் தடியன்களை நாயகன் டும் பந்தாட்டமும் காசு பார்க்க செய்து கொண்ட காம்பிரமைஸ்(சமாதானம்) என்று விலகி விடவேண்டும்.
இறுதியில் நடக்கும் கற்பழிப்பு காட்சியும் மிக எதார்த்தமாகத்தான் படம் பிடிக்கப் பட்டுள்ளது. தனது பெற்றோர் முன்னும் ஊரார் முன்னும் தன் மனைவி தோளில் கை போட்டு நடக்கத் தயங்கும் தம்பதிகளைக் கொண்டதுதான் இந்தியச் சமூகம் இதில் வன்புணர்ச்சி காட்சியை இப்படி காட்டினால்தான் எதார்த்தமாக இருக்கும். அதையும் மிக நீண்ட நேரம் காட்டியிருப்பது இயக்குனர் எதார்த்தத்தில் லயித்திருப்பது புரிகிறது. புதிய பாபாதை, மண்வாசனை மற்றும் சில படங்களின் கதம்ப கலவை போல் இப்படம் உணரப் படுவது புதுமைதான்.
எட்டு வயதில் பருத்தி வீரனால் காப்பாற்றப் பட்ட உடலை அவனுக்கே கொடுக்க வேண்டும் என்று உறுதியாய் இருக்கும் முத்தழகின் பாத்திரம் எத்தனை பரிதாபம். அவருக்கு தனது நாயகன் திருந்த வேண்டும் என்பதில்லை. அவன் வேண்டுமானால் தனது தந்தையைக் கூட வெட்டிப் போடட்டும் னால் தன் உடலை அவனக்குத் தர வேண்டும் அவ்வளவுதான். கிராமத்துப் பெண்கள் இப்படித்தான் தங்கள் உடல்களை பட்டயம் எழுதி காத்திருக்கிறார்களோ?. பொறுக்கிகளையும், கொலை, கொள்ளை, விபச்சாரம் என ஊறிப்போகும் நாயகர்களை காதலிக்கும் ஒரு பெண் எத்தனை மனநிலையை உடையவள். பருத்தி வீரன் எந்த விதத்திலும் நல்லவனாகக் காட்டப் படவில்லை. மற்றப் படங்களில் இவ்வாறான நாயகர்கள் மனதிலும் ஈரம் இருக்கிறது என்பதை காட்டும் படியான காட்சிகளை அமைப்பதுண்டு. பருத்திவீரனில் அப்படியுமில்லை.
இவ்வாறானப் படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் பொறுக்கித்தனம் செய்யவும் அவ்வாறான பொறுக்கிகளை இளைஞிகள் காதலிக்கவும் வேண்டும். அதுதான் நாகரீகமோ. உலக அரங்கில் இவ்வாறானப் படங்களைக் காட்டும் போது அவர்கள் நம் மக்களின் பண்பாட்டை குறைமதிப்பிட மாட்டார்களா.
பருத்தி வீரன் மட்டுமல்ல இன்னும் பல திரைப்படங்கள் இப்படித்தான் உலக அரங்கில் நம் மானத்தை வாங்குகின்றன. நாட்களாய் திட்டமிட்டு கதை, காட்சி, வசனம் என துண்டு துண்டாய் விவாதம் செய்து செய்யப் படும் இவ்வாறான படங்கள் திட்டமிட்ட சதியன்று வேறேன்ன? படச்சுருளின் ஒவ்வொரு சட்டத்திற்குள்ளும் என்னென்ன பதிவாக வேண்டும் என்று திட்டமிடும் இவர்கள் தங்களை அறியாமலா இந்த மாதிரியானவைகளை பதிய விடுகிறார்கள். இவ்வாறானவற்றை தவிர்க்கலாம். எதிர்க்கலாம். குறைந்தது இவ்வாறான படங்களுக்கு தரவு கொடுக்காமல் இருக்கலாம்.